Friday, February 27, 2009

ஹைக்கூ கவிதைகள்(2)..

காற்றுக்கு புத்தி இல்லை
கயவர்கள் மூக்கிலும்
நுழைகிறதே..

தலை எழுத்தாய் முகவரி
அஞ்சல் உறையில்..

எடுக்க மறந்ததை
சொல்லி காட்டியது
படர்ந்த தூசி..

உயிர் பெற
புதைகிறது
மண்ணில் விதைகள்..

உருவம் கொடுக்கிறார்
கடவுளுக்கு
சிற்பி..

அறிவைக் கொடுக்கும் புத்தகம்
அமைதியாய் அலமாரிகளில்
நூலகம்..

நிலவின் பிரதி
தெரியவில்லை,
வற்றிய கிணறு..

பாத்திரத்தை தேய்த்து
வயிற்றைக் கழுவும்
வேலைக்காரி..

நொடிகளுக்குள்
மனம் மாறும்
கடிகாரம்..

கப்பல்
கவிழ்த்தால்..
காகிதம்
நனைந்தது..

3 comments:

தமிழ் said...

/அறிவைக் கொடுக்கும் புத்தகம்
அமைதியாய் அலமாரிகளில்
நூலகம்../
அருமை

பிரதீப் said...

superb! which kavithai thoguppu u r currently reading? who is ur favourite kavingar?

நவீன் said...

not particularly reading any kavidhai thoguppu..favourite means vairamuthu,arivumathi,devadhachan,nagulan
etc..