Tuesday, September 29, 2009

நேற்று இன்று நாளை..

நேற்று,
முந்தா நாள்
ஆனது
இன்று...

நாளைக்கு
இன்று
நேற்று
தான்...

நாளை,
நாளை மறுநாள்
நேற்று,
முந்தா நாள்
இவைகளுக்கிடையில்
சிக்கி தவிக்கிறது
இன்று..

ஒத்திபோடவே
அதிகம்
பயன்படுகிறது
நாளை...

பழசாகிப்போன
நேற்று..
பார்க்கவே முடியாத
நாளை..
இவைகளை நினைத்தே
கடந்து போகின்றது
இன்று..

Thursday, September 3, 2009

அடம்..

என்றும் இல்லாத நாளாய்
இன்று குழந்தை நிறையவே
அடம் பிடித்தது
பள்ளிக்கு செல்ல..
சமாதானம் செய்து கொண்டிருந்த
எனக்கு அந்த வழியே சென்று
கொண்டிருந்த வேறொரு குழந்தை
தன் அப்பாவிடம்..
அந்த குழந்தையின் அப்பா
ஏன் இவ்வளவு அடம் பிடிக்கிறார் என்று
கேட்பது
எதேச்சையாய் கேட்டது ..