Saturday, July 5, 2008

நாவிதன்...

அனைவருக்கும் தலைக்கு மேல் வேலை இருக்கும்
இவருகென்னவோ தலையில் தான் வேலை...
ஒரு கையில் சீப்பு, ஒரு கையில் கத்திரி,
இரண்டையும் ஒரே நேரத்தில் லாவகமாக கொண்டு செல்ல
இவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது..
ஞாயிற்றுகுகிழமை இவர் பொழுது சாய்ந்து வீடு
திரும்புகையில்,
என்னத்த வெட்டி முறிசிட்டன்னு
யாரும் இவரிடம் கேள்வி கேட்க முடியாது..
கை மேல் பலன் என்பார்கள்
அது இவர் விஷயத்தில் சரியாய் இருக்கிறது ..
கடவுள் படைத்த மனிதனை
அழகாக்கும்
இவர்களும் ஒரு வகையில் கடவுளே ...