Friday, May 22, 2009

இப்படியாய் போகின்றது தருணங்கள்..

இன்று ஏதேனும் எழுத வேண்டுமே...
கவிதை எழுதலாமா...
எதை பற்றி எழுதுவது..
மழை....ம்ம்ம்..
வேண்டாம்..
கடல் அல்லது கரையை பற்றி..
வேண்டாம்..
நிறைய எழுதிட்டோம்..
அம்மாவைப்பற்றி..
இல்லை..
சரி அவளை பற்றி..
என யோசித்து
கடைசியில் ஏதும்
எழுதாமல் போகிறேன்...

Thursday, May 21, 2009

படித்ததில் பிடித்தவை ...

சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் இந்த வரிகளை படித்தேன்.. இதை படிக்கிறவர்கள் கண்டிப்பாக தன் அம்மாவை இன்னும் அதிகம் நேசிப்பார்கள்..

மழையில் நனைந்து வீட்டிற்கு வந்தேன்.
‘ஏன் குடையை எடுத்துக்கொண்டு செல்லவில்லை?’ என்று அண்ணன்
கேட்டான்.
‘மழை நிற்கும் வரையில் காத்திருந்திருக்கலாமே’ என்று அக்கா சத்தம்
போட்டாள்.
‘சளிபிடித்து சங்கடப்பட்டால்தான் உனக்கெல்லாம் புரியும்’
என்று கோபப்பட்டார் அப்பா.
நனைந்த தலையை துவட்டியபடியே ‘முட்டாள் மழை! பிள்ளை
வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கக் கூடாதோ?’ என்றாள் அம்மா.

Saturday, May 2, 2009

பரிதவிப்பு..

முதல் முறையாய் யோசித்தேன்
என் காலில் அடிபட்டு இறந்துபோன
ஏறும்பிற்காக..
அதுவும் என்னைப்போல் அன்றே பிறந்த
தன குழந்தையை பார்க்கச்சென்றுகொண்டிருக்குமோ
என்று ...