நான் அழகா இருக்கிறேனா என்று
கேட்கிறாய் நீ..
எனக்கு பொய் சொல்ல தெரியாது என்கிறேன் நான்..
சும்மா சொல்லு என்கிறாய் நீ
உலகத்திலேயே நீ தான் அழகு என்கிறேன் நான் ..
நீயோ வெட்கத்தில் கன்னம் சிவக்கிறாய்...
உலகத்தில் எத்தனையோ பேர் இருக்க
என்னை ஏன் தேர்ந்தேடுத்தாய் நீ என கேட்கிறாய் நீ..
வேர் எவரும் கிடைக்காததால் என்கிறேன் நான் ..
ச்சி போடா உனக்கு எப்போவும் வெளையாட்டு தான் என்கிறாய் நீ ..
உண்மை அது தான் என்றாலும்..
என்னை எவ்வளவு பிடிக்கும்
என கேட்கிறாய் நீ..
நானோ அவள் அளவிற்கு என்கிறேன்..
நீயோ அவசரத்தில்
ஏன் அவளை விட என்னை...
என கூற முற்பட்டு
பிறகு யோசித்து என்னை
அடிக்க வருகிறாய்...
என்னை விட அதிகமாக
உனக்கு எது பிடிக்கும்
என கேட்கிறாய் நீ...
நான் உன்னை விட..
என்று யோசிப்பதற்குள்
மாறிவிடுகிறது உன் முகம்..
ஏதும் பிடிக்காது என சமாளிக்கிறேன் நான்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment