Monday, October 6, 2008

படித்ததில் பிடித்தது...

இங்கு வாழ்க்கை வாங்க(விற்க)ப்படும
தூங்க நினைத்து வெகுநேரம் தூக்கம் வராமல்
எழுந்தெழுதிய கவிதையிது.

அன்புத் தம்பி..!!

சிலிர்க்க வைக்கிறது
உனது வளர்ச்சி...
பெருமகிழ்ச்சி.

மூன்று வருடம் போதும்
சேமிப்பில்
தந்தையை பின்னுக்கு தள்ள.

முரண்பாடய் இருக்கிறது.
'கூண்டுப்பறவையல்ல நான் என்கிறாய்'
ஆனால்,
'கூண்டுக்குள்தான் அடைந்துகிடக்கிறாய்'.

இணையத்தால்
இதயம் இழக்கிறாய்.
கணினியில்
காலம் கழிக்கிறாய்.
தொலைகாட்சியால்
தொலைந்து போகிறாய்.
துரித உணவால்
தேகம் நச்சாக்குகிறாய்.
செல்பேசியால்
சிக்கி தவிக்கிறாய்.

இரவு , பகல்
இன்று வித்தியாசமில்லை.
அழைப்பு நிறுவன இயந்திரம்.
கண்ணதாசன்
இன்றிருந்தால்.
'தூங்கு தம்பி தூங்கு' என்று சொல்வானோ ??? :)

பழகுவது எப்படி?
சிரிப்பது எப்படி?
அழுவது எப்படி?
தூங்குவது எப்படி?
உண்பது எப்படி?
வாழ்வது எப்படி?
'புத்தகம் போதும் உனக்கு'.

வார கடைசிகளில்
வாழ்க்கை
வாங்குகிறாய்.
'உல்லாச அரங்குகளில்'.

அட்டவணை
அலசுகிறாய்.
'பெற்றவர்களை பார்ப்பது எப்போது'..??

மனிதம் மறந்துகொண்டிருக்கும்
'மாத்திரை' மனிதனே..!

பழக கல்.
சுற்றம் நோக்கு.
சுயமிழக்காதே....

Saturday, October 4, 2008

அப்பா..

நீ
அம்மா செல்லமா
அப்பா செல்லமா..
என்றால் எப்படி சொல்வேன்
அம்மா செல்லமான அப்பா செல்லம் என்று ..

பிரசவத்தின் போது
அம்மா ஒரு குழந்தைக்கு
தாயாகிறாள்
அப்பாவோ இரு குழந்தைக்கு
தந்தையாகிறார்
அம்மாவையும் சேர்த்து ..

அம்மாவிற்கு
அனுபவம் இருந்ததாலோ என்னோவோ
அப்பா மட்டுமே
கண் கலங்கினார்
நான் புகுந்த வீட்டிற்கு செல்ல்லும்போது..

நான் பொய் சொல்வதை
தெரிந்து கொண்டதாய்
அப்பா இது வரை
காட்டி கொண்டதே இல்லை..

என் கைப்பிடித்து
நடைபயில சொல்லிக்கொடுத்த
அப்பா..
என் கரம் பிடித்து நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..