Wednesday, November 12, 2008

எங்கோ எப்போதோ எழுதியது...

சிறுது நேர இடைவெளிக்கு
பிறகு தொடர்ந்த எங்கள்
பேருந்து பயணத்தில் ..
ஓர் எறும்பும்
சேர்ந்து கொண்டது....

நான் பிறக்கும் போது
சிரித்து கொண்டே
பிறந்தேனாம்
என் அப்பா
அடிக்கடி சொல்வார்..
நான் அழுது
இதுவரை அவர்
பார்த்ததில்லை
நான் இப்போது அழுவதை
பார்ப்பதற்கு
அவர் இல்லை..