Friday, June 12, 2009

மழை தனிந்த கணம்...

சற்றே
மழை தனிந்த
அந்த ரம்மிய பொழுதை
கவனித்து
பார்த்திருக்கிறீர்களா..
பகலும் அல்லாத
இரவும் அல்லாத
ஒரு பொழுது அது..
பூமியெங்கும் ஒரு மஞ்சள்
போர்வை போர்த்தியிருக்கும்..
பறவைகள் தலை சிலிர்த்தி
பறக்கத் தயாராகும்..
கூரையில் தங்கிய மழைத்துளிகள்
சொட்டு சொட்டாய் தரையைத்தடவி சத்தமிடும்..
மண்ணோடு கலந்த மழைத்துளிகள்
நம் நினைவிற்கே ஒரு வாசம் கொடுக்கும்..
பூமியே அன்று பிறந்த குழந்தை போல்
அப்பழுக்கற்று இருக்கும்..
பார்க்கும் மனிதர்கள் எல்லாம்
நல்லவர்களாக தெரிவார்கள்..
நம் மனம் பசுமையில் நிரம்பியிருக்கும்..
இக்கணம் ஓரிரு மணித்துளிகள்
தான் நீடிக்கும்..
இதுவரை இல்லையெனும் இனிமேலாவது
அனுபவிக்கத்தவறாதீர்கள்...

நல்லா இருக்கா ..

யாரோ ஒரு ஒருவரின்
வரிகளை வாசிக்கையில்,
ஆச்சர்யமளித்தது..
ஓ..
இப்படியும் எழுதலாமா
என்று..
அப்போது எழுதியது தான்
இந்த கவிதை..