Friday, March 6, 2009

நெய்தல் நினைவுகள்..

கரையில் கட்டிய
மணல் வீடு தான்
நான் கட்டியதிலேயே
அழகான வீடு..

இதே கடற்கரையில்
நான் உனக்கு அளிக்கும்
பதில்கள்..
என் அப்பா எனக்கு
மறுத்த பதில்கள்..

மணல் வீட்டில்
குழி தோண்டிய போது
முதலாய் அவள்
கை பிடித்தேன்..

சிதிலடைந்த அந்த
பாய்மர படகு
இன்று என்னை எனக்கே
ஞாபகப்படுத்துகிறது..

என் அப்பாவிடம் கைகுழத்தையாய்
இருந்தது முதல்
என் மகனிடம் கைத்தாங்கலாய்
இன்று வரை
இந்த கடற்கரையில்
நான் நடந்து வருகிறேன்..

கரைக்கு
கடல் ஒன்றே
அடையாளம்..

லட்சகணக்கான அடி ஆழமாம்
கடல்
கரையை தாண்டி வருவதில்லை
கடல் இல்லை
கரை தான்
அதிசயம்..

கரையில் ஒதுங்கியிருக்கும்
அந்தபந்து
சிறு வயதில் அடித்து சென்ற
என் நீல நிற பந்தையே
நினைவுபடுத்துகிறது..

No comments: