Tuesday, March 2, 2010

காதலும் கவிதையும்....

நீ காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து
நன்கு கவிதை எழுதுகிறாய்
என்கிறார்கள்..
உன்னை தானே எழுதிக்கொண்டிருக்கிறேன்
எப்படி இல்லாமல் போகும் நன்கு ...

வார்த்தைகளிலான என் கவிதை
உயிர் பெற்று புலம்புகிறது
உன்னை பார்த்தவுடன் ...

உன்னைப்பற்றி தான்
எழுதுகிறேன் என்றாலும்
நீ அருகில் இருந்தால் எழுத
முடிவதில்லை..
வார்த்தைகள் கைக்குள் சிக்கி
காற்றில் கரைந்து விடுகின்றன ..

அழகு,
வெட்கம்,
கோபம்,
என
அனைத்திற்கும்
உன்னையே உதாரணமாய்
காட்டுகிறது இந்தக்காதல்...

நான் காதலிப்பதை
வெளிக்காட்டிவிட்டது
இந்த பாழாய்ப்போன கவிதை ....

எனக்கு
காதலையும்
கவிதையையும்
இந்த
காதலே கற்றுக்கொடுத்தது..

உன்னை காதலித்ததற்காய்
கடைசியில் என்னிடம் எஞ்சியது
நான் எழுதிய கவிதைகளே ...

1 comment:

Sivakumar said...

//நான் காதலிப்பதை
வெளிக்காட்டிவிட்டது
இந்த பாழாய்ப்போன கவிதை ....//

அருமையான வரிகள்... தொடர்ந்து எழுது!!!