காலையில் தவறவிட்ட
பேருந்திலிருந்து
ஆரம்பமாகிறது
அன்றைய அலுவலக
நெருக்கடிகள்..
நியதி ஒன்றுமில்லை
எழுபவரின்
அருகில் நிற்பதொன்றே
அதிகபட்ச தகுதி
பேருந்து இருக்கையில்
அமர்வதற்கு..
அந்த பேருந்து ஓட்டுனர்
இதுவரை
தன் குழந்தையை
பள்ளிக்கு கொண்டு சென்று
விட்டதில்லையாம்..
அவளின் அவசரம்
அவரின் அலட்சியம்
நெடுஞ்சாலையில்
நில்லாமல் செல்லும் ஓட்டுனர்..
அடிபட்டவனக்கும்
அவன் வண்டிக்கும் இடையில்
புகுந்து செல்கின்றன
வாகனங்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அவசர வாழ்க்கையை சாடி நல்லா எழுதி இருக்கிங்க...
அந்த பேருந்து ஓட்டுனர்
இதுவரை
தன் குழந்தையை
பள்ளிக்கு கொண்டு சென்று
விட்டதில்லையாம்..
:((
அடிபட்டவனக்கும்
அவன் வண்டிக்கும் இடையில்
புகுந்து செல்கின்றன
வாகனங்கள்..
:(((((
Post a Comment