பணம் ஒன்றே முக்கியமாய் எண்ணியிருந்தால்
நான் வேசியாகவே இருந்திருப்பேன்..
பணத்தால் ஏதும் முடியும் நினைத்திருந்தால்
அவர் மிருகமாகவே இருந்திருப்பார்..
இருவருமே அப்படி இல்லை
இன்று அவர் மனிதனாக..
நான் அவரின் மனைவியாக..
என்ன மனுச வாழ்க்கை சார் இது..
அன்னைக்கு எங்கப்பா இறந்து போயிருந்தார்
நான் அழுதுகிட்டு தான் இருந்தேன்..
மூணு மணிநேரத்திலே பசிக்க ஆரம்பிடுச்சுருச்சு..
நானும் வீம்பா ஒரு நாள் இருந்திட்டேன்..
கடைசியிலே பசி தான் ஜெயித்தது..
என்னத்த சார் கொண்டு போப்போறோம் கடைசியிலே..
இருக்கிற வரைக்கும்
சக மனிதர்களிடம்..
என்ன சார் நல்ல இருக்கிங்களா..
கவலைபடாதீங்க சார்,
போன்ற ஆறுதல் வார்த்தைகள்..
கடைசியா ஒண்ணு சார்..
இருக்கிற வரைக்கும் கொடுப்போம்..
அதை விட முக்கியம்
சாகிற வரைக்கும் வாழ்வோம்..
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
very well understanding about life. super
Post a Comment