Tuesday, June 10, 2008

கட்டியவள்..

சொந்த பந்தங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தன..
பெற்ற மகன் கடைசியாய் பறந்து வந்திருந்தான்..
அனைவரின் முகத்திலும் போலியான கவலைகள்..
பதினோர் நாள் காரியங்கள் நடந்து முடிந்தன...
போட்டத போட்டபடியே வந்துட்டேன்..
இப்படியாய் பல காரணங்கள்
அவரவர்கள் புறப்பட..
மகன் முன்னமே புறப்பட்டு போயிருந்தான்..
இப்போது வீட்டில் நான் மட்டும் தனியாக..
கட்டிய மனைவியை விட வேறென்ன துணை இருந்துவிட முடியும்
மனிதனின் வாழ்க்கையில்...
அனைவருக்கும் தன் மனைவியை பிடிக்கும்...
எனக்கு அவ்வளவு பிடிக்கும்...