Monday, December 7, 2009

அரவணைப்பு..

எறும்பு ஒன்று கனத்து பெருத்து
என்னை துரத்தி வந்ததாக
கண்ட கனவை
ஒரு வித பயத்தோடு
அம்மாவிடம் கூறினேன்..
வாஞ்சையோடு அழைத்தவள் இருகரம்
அணைத்து உறங்க வைத்து கொண்டாள்..
தொடர்ந்து துரத்தி வந்த
அந்த உருவத்தோடு இப்போது
சண்டையிட்டு கொண்டிருக்கிறேன்
அம்மாவின் அரவணைப்போடு...

No comments: