நான் ஒரு கவிதைப்ப்ரியன்..
சந்தோசம்,சோகம்,கனவு
இப்படி அனைத்தையும்
கவிதையாய் எழுதுவேன் ..
நண்பன் ஒருவன் என்னிடம் கேட்டான்
ஏன் காதலியை மட்டும் எழுதுவதில்லை
என்று..
நான் அவனிடம் கூறினேன் எப்படி
கவிதையை கவிதையாக எழுதுவது என்று ..
Tuesday, December 15, 2009
கொஞ்சம் சந்தோசமான விஷயம்...
வணக்கம்,
என்னுடைய கவிதை ஒன்று உயிர்ம்மை இணையதளத்தில் வெளியாகி உள்ளது.பின் வரும் முகவரியை கிளிக் செய்து படிக்கலாம்
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2317
நன்றி..
என்னுடைய கவிதை ஒன்று உயிர்ம்மை இணையதளத்தில் வெளியாகி உள்ளது.பின் வரும் முகவரியை கிளிக் செய்து படிக்கலாம்
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2317
நன்றி..
Monday, December 7, 2009
அரவணைப்பு..
எறும்பு ஒன்று கனத்து பெருத்து
என்னை துரத்தி வந்ததாக
கண்ட கனவை
ஒரு வித பயத்தோடு
அம்மாவிடம் கூறினேன்..
வாஞ்சையோடு அழைத்தவள் இருகரம்
அணைத்து உறங்க வைத்து கொண்டாள்..
தொடர்ந்து துரத்தி வந்த
அந்த உருவத்தோடு இப்போது
சண்டையிட்டு கொண்டிருக்கிறேன்
அம்மாவின் அரவணைப்போடு...
என்னை துரத்தி வந்ததாக
கண்ட கனவை
ஒரு வித பயத்தோடு
அம்மாவிடம் கூறினேன்..
வாஞ்சையோடு அழைத்தவள் இருகரம்
அணைத்து உறங்க வைத்து கொண்டாள்..
தொடர்ந்து துரத்தி வந்த
அந்த உருவத்தோடு இப்போது
சண்டையிட்டு கொண்டிருக்கிறேன்
அம்மாவின் அரவணைப்போடு...
Subscribe to:
Comments (Atom)