Thursday, May 21, 2009

படித்ததில் பிடித்தவை ...

சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் இந்த வரிகளை படித்தேன்.. இதை படிக்கிறவர்கள் கண்டிப்பாக தன் அம்மாவை இன்னும் அதிகம் நேசிப்பார்கள்..

மழையில் நனைந்து வீட்டிற்கு வந்தேன்.
‘ஏன் குடையை எடுத்துக்கொண்டு செல்லவில்லை?’ என்று அண்ணன்
கேட்டான்.
‘மழை நிற்கும் வரையில் காத்திருந்திருக்கலாமே’ என்று அக்கா சத்தம்
போட்டாள்.
‘சளிபிடித்து சங்கடப்பட்டால்தான் உனக்கெல்லாம் புரியும்’
என்று கோபப்பட்டார் அப்பா.
நனைந்த தலையை துவட்டியபடியே ‘முட்டாள் மழை! பிள்ளை
வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கக் கூடாதோ?’ என்றாள் அம்மா.

1 comment:

Senthil Kuamr said...

Thanks for posting this, mate! Ammaa is always a wonder! We can't stop wondering!