Sunday, May 4, 2008

ஹைக்கூ கவிதைகள் ...

வறுமையிலும் முகம் மலர சிரித்தான்
ரேசன் கார்டுக்காக
ஒரு போட்டோ...


உருவமில்லா காற்று
மயக்கும் இசையாய்
புல்லாங்குழலில்...

ஒரு வாய் உணவில்
இரு உயிர்கள்
கர்ப்பிணிப்பெண்...

நேரம் தவறாமல்
இலக்கை அடைகிறது
கடிகார முள்..

வெறுத்த உணவு
ருசித்தது,
பசித்தவுடன்..

இல்லாததை சொல்லிக்காட்டியது
பாத்திரமட்டத்தை தேய்க்கும்
கரண்டி...

1 comment:

Sivakumar said...

எப்படி எல்லாவற்றையும் வித்தியாசமாக செதுக்குகிறாய்? ம்ம்ம்ம்... கூடப்பிறந்த குணம் போலும்!!! அற்புதம்