Saturday, May 3, 2008

பேருந்து ஓட்டுனர்...

அனைத்து ஆண்களும்
பெண்ணிற்கு வாழ்க்கைபடுவார்கள்...
இவர் பேருந்திற்கு
வாழ்க்கைப்படுகிறார்...
முக்கால் தினம் பேருந்து இருக்கையிலும்,
மீதி மொட்டைமாடி கட்டிலிலும்
முடிகிறது...
பேருந்தில் வேலைக்கு செல்வோர்
மத்தியில்
இவர் பேருந்திலேயே வேலை செய்கிறார்..
அதிகபட்சமாய் இவர் நாள் முழுவதும்
பேசும் வார்த்தை
'படியில் நிற்காதே மேலே ஏறு 'என்பது,
எந்த ஒரு இரைச்சலிலும் நடத்துனரின்
விசில் சத்தம் மட்டும் கேட்க
இவர் காது நன்கு பழக்கப்பட்டிருக்கிறது ..
இவருடைய அப்போதைய தற்காலிக லட்சியம்
பேருந்தை சேதாரமில்லாமல்
டிப்போவில் சேர்ப்பது...

1 comment:

Sivakumar said...

தெள்ள தெளிவாக அழகாக இருக்கிறது ஒவ்வொரு வரியும்.....