தனிமையை ரசிக்கிறேன்..
தூக்கமின்றி தவிக்கிறேன்..
தேவையின்றி பேசுகிறேன்..
தேவையின்போது மௌனிக்கிறேன்..
வேளைதவறி உண்கிறேன்..
நாள் பாதியை கண்ணாடிமுன் தொலைக்கிறேன்..
ஆம்,
நானும் காதலிக்கிறேன்...
சத்தமில்லாமல் சிரிக்கிறேன்,
சுவையறியாமல் உண்கிறேன்,
சிநேகமில்லாமல் பழகுகிறேன்,
சிந்தனையில்லாமல் யோசிக்கிறேன்,
சலனமில்லாமல் கிடக்கிறேன்,
இது போல்,
சின்னச்சின்னதாய் சில சித்ரவதைகள்,
ஆனால்
சந்தோஷமாய்..
சில சமயங்களில்
நீ அழகு
பல சமயங்களில்
நீயே அழகு
சில சமயங்களில்
நீ நீயாக
பல சமயங்களில்
நீயே எனக்காக...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
யாருப்பா அந்த பொண்ணு?
Post a Comment