என்றும் இல்லாத நாளாய்
இன்று குழந்தை நிறையவே
அடம் பிடித்தது
பள்ளிக்கு செல்ல..
சமாதானம் செய்து கொண்டிருந்த
எனக்கு அந்த வழியே சென்று
கொண்டிருந்த வேறொரு குழந்தை
தன் அப்பாவிடம்..
அந்த குழந்தையின் அப்பா
ஏன் இவ்வளவு அடம் பிடிக்கிறார் என்று
கேட்பது
எதேச்சையாய் கேட்டது ..
சுமித்ரா ❤️
2 weeks ago
1 comment:
பிரமாதம்.... எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிற!?
Post a Comment