நீ
அம்மா செல்லமா
அப்பா செல்லமா..
என்றால் எப்படி சொல்வேன்
அம்மா செல்லமான அப்பா செல்லம் என்று ..
பிரசவத்தின் போது
அம்மா ஒரு குழந்தைக்கு
தாயாகிறாள்
அப்பாவோ இரு குழந்தைக்கு
தந்தையாகிறார்
அம்மாவையும் சேர்த்து ..
அம்மாவிற்கு
அனுபவம் இருந்ததாலோ என்னோவோ
அப்பா மட்டுமே
கண் கலங்கினார்
நான் புகுந்த வீட்டிற்கு செல்ல்லும்போது..
நான் பொய் சொல்வதை
தெரிந்து கொண்டதாய்
அப்பா இது வரை
காட்டி கொண்டதே இல்லை..
என் கைப்பிடித்து
நடைபயில சொல்லிக்கொடுத்த
அப்பா..
என் கரம் பிடித்து நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment