Thursday, April 17, 2008

ஒரு காலைப்பொழுதில் ...

அது ஒரு காலைப் பொழுது,நேரம் சுமார் ஏழு அல்லது ஏழரை இருக்கலாம். என்னுடைய நண்பன் ஒருவனுக்காக வடபழனியில் உள்ள ஒரு தெருவில் அவன் வீட்டு வாசலின் எதிரில் காத்துக் கொண்டிருந்தேன். அங்கும் இங்கும் திரும்பி பார்த்துக்கொண்டிருக்கையில் அவளை கவனித்தேன்,என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். நானும் சரி எதேட்சையாய் தான் என்னை பார்த்திருப்பாள் என நினைத்து மீண்டும் திரும்பி பார்த்தேன் அவள் என்னையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள் . நான் பார்ப்பதை கவனித்தும் அவள் தன் பார்வையை திருப்பவில்லை, எனக்கோ மனதில் சிறிது (அதிகமாகவே) சந்தோஷம் , நம்மளையும் ஒரு பொண்ணு, அதுவும் அழகான பொண்ணு பார்க்கிறாளே என்று, சற்றே கற்பனையில் பறக்கும் வேளையில் என் நண்பன் வந்து விட்டான் . நானும் மனமில்லாமல் அவனோடு நகர , நேரே வந்தவள் நான் நின்றுகொண்டிருந்ததற்கு பின்னாடி இருந்த குப்பை தொட்டியில் குப்பையை போட்டபடி என்னை பார்த்தாள் .. ஒ அப்பா அப்ப இவ்வளவு நேரம் அவ பார்த்தது குப்பை தொட்டியை தானா, என்று நினைக்கும் வேளையில்,ஒரு சைக்கிள்காரன், யோவ் சாவு கிராக்கி என்ன பகல்லையே கனவா என்று சத்தமாய் கேட்க,நான் மனசுக்குள்ளயே ஆமாம் என்றேன்..
(வலை பின்னப்படும....)

No comments: